04 July 2014

சர்ப்பதோஷம் போக்கும் பக்தவச்சலப் பெருமாள்

சர்ப்பதோஷம் போக்கும் பக்தவச்சலப் பெருமாள்
பக்தவச்சலப் பெருமாள்


திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாளை பவுர்ணமி, உத்திரம், திருவோணம், வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபடலாம். திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட தடை நீங்கும் என்பது நம்பிக்கை. 

ஆதிசேஷன் சன்னதியில் புதன்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி, பால் பாயாசம் படைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டால் ராகு - கேது மற்றும் சர்ப்பதோஷம் விலகும். இத்தலத்தில் வழிபட்டால் வியாபாரம் செழிக்கும். 

வியாபாரம் லாபம் தருவதாக மாறும். நஷ்டம் தந்து கொண்டிருக்கும் வியாபாரம் லாபத்துக்கு மாறும். அது மட்டுமல்ல பக்தவச்சலப் பெருமாளை வழிபடுபவர்களுக்கு இழந்த சொத்து திரும்ப கிடைக்கும். 

காணாமல் போன பொருட்கள் திரும்ப வரும். இழந்த பதவியை பெறலாம். அதோட பதவி உயர்வும் தேடி வரும். தின்னனூர் வந்து பக்தவச்சலப் பெருமாளை மனதார பிரார்த்தனை செய்து வாருங்கள், விரைவில் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

No comments:

Related Posts with Thumbnails